தமிழ்நாட்டு எல்லையை தாண்டினால் திமுகவுக்கு முகவரி கிடையாது: தமிழிசை
தமிழ்நாட்டு எல்லையை தாண்டினால் திமுகவுக்கு முகவரி கிடையாது என்று இராஜபாளையத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்ம் ஒன்றில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசமாக பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சட்ட விதிகளை மீறுபவர்களுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் செயல்படுவதாகவும், கள்ளத்துப்பாக்கி, பிரியாணி கடையில் பிரச்சினை, அழகு நிலையம், பேன்சி கடை போன்ற இடங்களில் பிரச்சினை செய்து அடாவடி கட்சி நடத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருவதாகவும், எத்தனால் மூலம் எரிசக்தி கொண்டு வரவும், பேட்டரி கார்கள் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழிசை கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.