தமிழ்நாட்டில் அடுத்து கைது செய்யப்படுபவர் இவர்தான்: எச்.ராஜா

தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் இருக்கும் நிலையில் தமிழகத்தில் அடுத்து கைது செய்யப்படுபவர் இவர்தான் என எச்.ராஜா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ப.சிதம்பரம், டி.கே.சிவகுமார் உள்ளிட்ட காங்கிரஸ் புள்ளிகள் கைதாகி வருவது குறித்து செய்தியாளர்கள் எச்.ராஜாவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் கூறிய எச்.ராஜா, ‘இவர்கள் எல்லாம் பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதிகள். ஊழல் செய்தே இப்படி சொத்துக்களை சேர்த்தனர். அதனால்தான் கைதாகி உள்ளனர்.

அதேபோல் தமிழ்நாட்டில் கல்லூரி நடத்தி வரும் ஒருவர் ரூ.42 கோடி அளவுக்கு ஊழல் செய்திருக்கிறார். அவரும் சீக்கிரமாகவே கைது செய்யப்படுவார் என்று கூறினார். எச்.ராஜா கூறிய அந்த கல்லூரி நடத்தும் நபர் யார்? என்பதே தற்போதைய பெரிய கேள்வியாக உள்ளது

Leave a Reply