தமிழிசை மனு ஏற்பு: பாஜகவினர் நிம்மதி!
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட தமிழிசை செளந்திரராஜன் தாக்கல் செய்த வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து பாஜகவினர் நிம்மதி அடைந்துள்ளனர்.
பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் கவுரவ இயக்குனராக தமிழிசை உள்ளதை வேட்புமனுவில் குறிப்பிடவில்லை என்ற தி.மு.க. புகார் கூறினர். இதன் காரணமாக தமிழிசை வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழிசை அப்பதவியில் இருந்து ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்டதை தமிழிசையின் வழக்கறிஞர்கள் ஆதாரத்துடன் தெரிவித்ததை அடுத்து தமிழிசை வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.
இதனையடுத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் தனக்கு உதவிய சட்ட நிபுணர்களுக்கும் தமிழிசை செளந்திரராஜன் தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்து கொண்டார்.
Nomination accepted thanks. BJP legal team and my leaders on the spot facing the baseless //t.co/wg3YTxtfNG DMK
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) March 27, 2019
Leave a Reply
You must be logged in to post a comment.