தமிழிசையை முதல்வராக்க ஒத்திகையா? திவாகரன் கருத்து
வருமான வரி சோதனை குறித்த எந்தவித டென்ஷனும் இல்லாமல் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திவாகரன் அதிமுக அரசையும் முதல்வரையும் காட்டமாக விமர்சித்தார். கவர்னர் ஆய்வு குறித்து அவர் கருத்து தெரிவித்தபோது, ‘”தமிழக உரிமைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால் பதவி விலகுங்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்களுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்
மேலும் தமிழகத்தில் ஆளுநரின் நடவடிக்கைகளை கூர்ந்து பார்க்கும்போது இங்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனை முதல்வராக்க ஒத்திகை நடப்பது போல் உள்ளதாகவும் அவர் சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சி.டியை விசாரணை கமிஷனில் கொடுப்போம் என கூறியதை அடுத்து அந்த சிடியை தேடவே வருமான வரித்துறையினர் சோதனை செய்ததாகவும் திவாகரன் தெரிவித்துள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.