தமிழக முதல்வர் இன்று திடீர் டெல்லி பயணம்: காரணம் என்ன?
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி பயணம் செல்லவுள்ளதாக தமிழக அரசு வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.
கஜா புயல் பாதிப்பு குறித்தூ மத்திய அரசிடம் விளக்குவதற்காகவும், கஜா புயல் நிவாரண நிதி கேட்பதற்காகவும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லிக்கு செல்ல உள்ளதாகவும், நாளை காலை அவர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
நேற்று டெல்டா மாவட்டங்களுக்கு நேரில் சென்று புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் மழை காரணமாக பாதியில் திரும்பிவிட்டார். இந்த நிலையில் புயல் பாதிப்பு குறித்த சேதப்பட்டியல் தயார் செய்து அந்த பட்டியலுடன் இன்று மாலை டெல்லி செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.