தமிழக முதல்வரின் அன்புக் கட்டளைக்கு இணங்கினோம்: பிரேமலதா
தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வரும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா இன்று தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசியபோது, ‘அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு திருப்பூர் தொகுதியை கேட்டதாகவும், ஆனால் தமிழக முதல்வரின் அன்புக் கட்டளைக்கு இணங்கி, கூட்டணி தர்மத்துடன் விஜயகாந்த் அந்த தொகுதியை விட்டுக்கொடுத்ததாகவும் கூறினார்.
மேலும் தேமுதிக, அதிமுக, பாஜகவினர் பக்திமான்கள், பண்பானவர்கள், பணிவானவர்கள் என்றும் அதற்கு மாறாக திமுக் கூட்டணி அராஜக கூட்டணி என்றும், திமுகவினர் ஒவ்வொரு கடையாக சென்று அராஜகம் செய்வதாகவும் பிரேமலதா கூறினார்
மேலும் தமிழ் இன படுகொலைக்கு காரணமாக திமுக-காங்கிரஸ் கூட்டணி ஒரு ஓட்டு கூட பெறவில்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டார்
Leave a Reply
You must be logged in to post a comment.