தமிழக மீனவர்கள் 9 பேர்களை கைது இலங்கை கடற்படை
தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையினர்களால் தாக்கப்படுவதும் தொடர்கதையாகி வரும் நிலையில் இன்றும் அதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது
நேற்றிரவு நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் 500க்கும் மேற்பட்டோர் தங்கடைய விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் திடீரென நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 2 படகுகளுடன் 9 மீனவர்களை சிறைபிடித்தனர்.
நாகை மாவட்டத்தை சேர்ந்த 6 மீனவர்களையும், புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த 3 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்களை காங்கேசன் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்
கைது செய்யபட்ட 9 மீனவர்களும் நீரியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.