தமிழக மக்கள் தவறை உணர்வார்கள்: தமிழிசை சவுந்தரராஜன்
தமிழக மக்கள் ஊழல் செய்யாத பாஜகவுக்கு வாக்களிக்காமல் தவறு செய்துவிட்டார்கள் என்றும், பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கவில்லை என உணர்வார்கள் என்றும், இருப்பினும் மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர நாட்டு மக்கள் உணர்ந்து வாக்களித்துள்ளார்கள் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பாஜக பெருவாரியான வெற்றியை பெற்றுவரும் நிலையில் தமிழகம், கேரளம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மட்டும் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் கூட தோல்வி முகத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.