shadow

தமிழக பட்ஜெட்: பிப்ரவரி 8ல் தாக்கல் செய்கிறார் துணை முதல்வர்

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் வரும் பிப்ரவரி 8 -ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார்.

இதுகுறித்து, தலைமைச் செயலக செயலாளர் சீனிவாசன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவத்: “தமிழ்நாடு சட்டப்பேரவையின் அடுத்தக் கூட்டத்தை 8.2.2019 ஆம் நாள், வெள்ளிக்கிழமை, காலை 10.00 மணிக்கு, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார்.

மேலும், அன்று காலை 10.00 மணிக்கு 2019-2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும்”

 

Leave a Reply