shadow

தமிழக சட்டப்பேரவை கூடும் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக அரசியல் பரபரப்பு ஏற்பட்டு வரும் நிலையில் தமிழக சட்டப்பேரவை ஜனவரி 2 ஆம் தேதி கூடவிருப்பதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநரின் உரையுடன் சட்டப்பேரவை தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் ஸ்டெர்லைட் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் சட்டசபையில் காரசாரமான விவாதங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது.

Leave a Reply