தமிழக அரசின் பி.ஆர்.ஓ தான் மதுரை ஆதினம்: டிடிவி தினகரன்
அதிமுகவுடன் அமமுக இணையவுள்ளதாக் மதுரை ஆதினம் இன்று மீண்டும் கூறியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தினகரன், மதுரை ஆதினம் இன்னும் தமிழக அரசின் பி.ஆர்.ஓவாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் அதிமுகவுடன் அமமுக இணைய மறைமுக பேச்சுவார்த்தை நடப்பதாக மீண்டும் மதுரை ஆதினம் தெரிவித்துள்ளதாகவும், யாருக்கோ உதவுவதற்காக இப்படி பொய் செய்திகளை அவர் பரப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ:
அதிமுகவுடன் அமமுக இணைய மறைமுக பேச்சுவார்த்தை நடப்பதாக மீண்டும் மதுரை ஆதினம் தெரிவித்திருக்கிறார்.யாருக்கோ உதவுவதற்காக இப்படி பொய் செய்திகளை தொடர்ந்து பரப்பினால்,மதுரை ஆதீன மடத்தின் பெயரைக் காக்கவாவது,அருணகிரி ஆதீனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்க விரும்புகிறேன். pic.twitter.com/YbbHP80cX1
— TTV Dhinakaran (@TTVDhinakaran) April 1, 2019
Leave a Reply
You must be logged in to post a comment.