இதுவரை 3 அமைச்சர்கள் பாதிப்பு

கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் செல்லூர் ராஜு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஏற்கனவே செல்லூர் ராஜுவின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழகத்தில் ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் மின்துறை அமைச்சர் தங்கமணி ஆகிய இருவருக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது தெரிந்ததே

இதனையடுத்து தற்போது மொத்தம் மூன்று அமைச்சர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply