தமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது: கனிமொழி
திமுக எம்.எல்.ஏக்களே அதிமுக ஆட்சி நீடிப்பதை விரும்புகின்றனர் என்று அமைச்சர் ஜெயகுமார் கூறிய கருத்து திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் திமுக தலைமை இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் இதுகுறித்து பதிலடி கொடுத்த திமுக எம்பி கனிமொழி, ‘தமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் அதிமுக அரசு மக்களின் பிரச்னைகளை புரிந்துகொள்ளாமல் அரசு வருவாயில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் 21 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு பின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும், திமுக மீண்டும் நேர்வழியில் ஆட்சியை பிடிக்கும் என்றும் கனிமொழி தெரிவித்தார்
Leave a Reply
You must be logged in to post a comment.