shadow

தமிழகத்தில் 1500 கோடி மோசடி செய்த நிறுவனம்: சிபிஐ வழக்குப்பதிவு

லட்சக்கணக்கான தமிழக மக்களிடம் ரூ.1500 கோடி மோசடி செய்த நிறுவனம் ஒன்றின் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இயங்கி பரிவார் டைரிஸ் என்ற நிறுவனம் தமிழக மக்கள் சுமார் 1.5 லட்சம் பேரிடம் ரூ.1500 கோடி மோசடி செய்ததாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பரிவார் டைரிஸ் என்ற நிறுவனத்துக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.

பொதுமக்களிடம் டெபாசிட் பெற்றுக்கொண்டு இரட்டிப்பாக பணம் தருவதாக கூறி ரூ 1500 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளதை அடுத்த இந்நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply