தமிழகத்தில் பாஜக மலர்ந்தே தீரும்: ராதாரவி முழக்கம்
தமிழகத்தில் இனி 25 ஆண்டுகள் பாஜகவின் ஆதிக்கம் தான் இருக்கும் என நடிகர் ராதாரவி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட நிலையில் அதிமுகவில் இணைய முயற்சி செய்தார் ஆனால் அந்த முயற்சி பலனளிக்காத நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் பாஜகவில் சேர்ந்தார்
இந்த நிலையில் பாஜகவை தமிழகத்தில் வளர்க்கும் நிலையில் அவர் அவ்வப்போது பேசி வரும் நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது ’தமிழகத்தில் பாஜக மலர்ந்தே தீரும் என்றும் இன்னும் 25 ஆண்டுகளுக்கு நாடு முழுவதும் பாஜக தான் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்
தமிழகத்தில் பாஜக, நோட்டா உடன் போட்டி போட்டுக் கொண்டு இருக்கும் போது எப்படி பாஜக வளரும் என ராதாரவிக்கு நெட்டிசன்கள் மற்றும் டிவிட்டர் பயனாளிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பாஜகவின் வளர்ச்சி தமிழகத்தில் இருக்கின்றதா இல்லையா என்பதை வரும் 2011 தேர்தலில் தெரிந்து விடும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.