தமிழகத்தில் நேற்று முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பேருந்துகள் உள்பட எந்த வித போக்குவரத்துக்கும் அனுமதி இல்லை
இந்த நிலையில் இரவுநேர ஊரடங்கு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் நேரம் மாற்றப்பட்ட நிலையில் தற்போது புறநகர் ரயிலில் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரி கூறும்போது தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளதை அடுத்து இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை புறநகர் ரயில்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது
அதேபோல் முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று குறைவான ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.