தமிழகத்தில் அனல்காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வரும் நிலையில் வரும் மார்ச் 6 மற்றும் 7ம் தேதிகளில் தமிழகத்தின் 11 உள்மாவட்டங்களில் அனல்காற்று வீசும் என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.
ஒரு சில இடங்களில் இயல்பைவிட 7 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும், வேலூர், கரூர், திருவண்ணாமலை, கோவை, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், திருப்பூர் மாவட்டங்களிலும் அனல் காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனல்காற்று வீசும் நேரங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.