சமீபத்தில் நாடு முழுவதும் ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டுள்ளதை அடுத்து நாடு முழுவதும் இன்று முதல் கூடுதலாக 80 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாகவும், அதில் தமிழகத்தில் இருந்து 3 ரெயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.
தமிழகத்தில் இயக்கப்படும் கூடுதல் சிறப்பு ரயில்கள் குறித்து தற்போது பார்ப்போம்
1. சென்னை சென்ட்ரல் – டெல்லி,
2. சென்னை சென்ட்ரல் – சாப்ரா
மேற்கண்ட இரண்டு சிறப்பு ரயில்களும் இருமார்க்கத்திலும் இன்று முதல் ரெயில்கள் இயக்கப்படும்.
3. செப்டம்பர் 15ஆம் தேதி முதல் திருச்சி-ஹவுரா இடையே இருமார்க்கத்திலும் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
மேற்கண்ட மூன்று சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு கடந்த 10ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது
மேலும் மாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் கூடுதல் ரெயில்களை இயக்க தயார் என்றும் ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.