shadow

தமிழகத்தின் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி: முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தின் 33வது மாவட்டம் கள்ளக்குறிச்சி என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் சற்றுமுன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கள்ளக்குறிச்சி பகுதியினர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், செஞ்சி, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திண்டிவனம், திருக்கோவிலுர், உளுந்தூர்பேட்டை, வானூர், சின்னசேலம் ஆகிய நகரங்கள் இருந்த நிலையில் இதில் இருந்து கள்ளக்குறிச்சி, சின்னசேலம் மற்றும் சங்கராபுரம் ஆகிய நகரங்கள் அடங்கிய கள்ளக்குறிச்சி என்ற புதிய மாவட்டம் உருவாகியுள்ளது.

இனி கள்ளக்குறிச்சி பகுதி மக்களுக்கு என தனி கலெக்டர் ஆபீஸ் உள்பட பல வசதிகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply