தப்பி ஓடிய வாலிபரின் காதலியையும் மடக்கிய போலீசார்: அதிரடி தகவல்
கொரோனா வைரஸ் முகாமில் இருந்து தப்பியோடி வாலிபர் ஒருவர் தனது காதலியை சந்தித்து விட்டு மீண்டும் முகாமுக்கு திரும்பி வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் அவருடைய காதலியையும் தற்போது கொரோனா வைரஸ் கண்காணிப்பு வளையத்திற்கு காவல்துரையினர் கொண்டு உள்ளனர்
மதுரையில் உள்ள கொரோனா வைரஸ் முகாமில் இருந்து தப்பியோடிய இளைஞர் ஒருவர் தனது காதலியை சிவகங்கை சென்று சந்தித்தார். பின் மீண்டும் முகாமுக்கு திரும்பி வந்துவிட்டார். ஆனால் அவருடைய காதலியையும் மடக்கிய போலீசார் தற்போது அவரையும் தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது
கொரோனா முகாமில் இருந்து தப்பி காதலியையும் இக்கட்டான நிலைக்கு தள்ளிய அந்த வாலிபருக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
Leave a Reply
You must be logged in to post a comment.