மருத்துவமனைக்கு வந்த இளைஞரால் பரபரப்பு

கோவையில் தன்னை கடித்த பாம்பை உயிரோடு பிடித்து, பையில் போட்டுக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு இளைஞர் வந்த்தால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்,

கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவரை எதிர்பாராதவிதமாக பாம்பு கடித்துவிட்டது. பாம்பு கடித்தவுடன் உடனே மருத்துவமனைக்கு செல்லாமல், தன்னை கடித்த பாம்பை அவர் பிடித்து ஒரு பையில் போட்டு கொண்டார்.

பின் மருத்துவமனைக்கு வந்து, இந்த பாம்புதான் தன்னை கடித்தது என்று அவர் கூறியதால் மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தால் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply