பரபரப்பு தகவல்

தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிய கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

இந்த படத்தின் ஒருசில காட்சிகள் மட்டுமே படப்பிடிப்பு உள்ளதாகவும் லாக்டவுன் முடிந்தவுடன் அந்த படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப் படுகிறது

இந்த நிலையில் சற்று முன்னர் இயக்குனர் மாரி செல்வராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தனுஷின் 37 வது படமான கர்ணன் குறித்து ஒரு முக்கிய அப்டேட்டை தெரிவித்துள்ளார்.

அதில் வரும் 28ம் தேதி கர்ணன் படத்தின் டைட்டில் போஸ்டரும், ஒரு ஆச்சரிய அறிவிப்பும் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார் இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply