தனி விமானம் மூலம் திருச்சி, டெல்டா மாவட்டங்களுக்கு ஹெலிகாப்டரில் செல்லும் முதல்வர்
கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சற்றுமுன் சென்னையில் இருந்து திருச்சிக்கு தனி விமானம் மூலம் சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 மாவட்டங்களை அவர் பார்வையிடுகிறார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் ஹெலிகாப்டரில் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார்
இந்த நிலையில், புயல் பாதிப்பு பற்றி தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப்பணி மேற்கொள்ள தமிழக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.