தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய நடிகர் உண்மையிலேயே இறந்த பரிதாபம்

‘வலியுடன் காதல்’ என்ற படத்தில் வில்லன் வேடத்தில் நடித்துள்ள ஆர்.எஸ்.கோபால் என்பவர் திரைப்படம் ஒன்றில் இறந்தது போல் ஒரு காட்சியில் நடித்த நிலையில் அந்த படத்தை பிரபலமாக்க தான் இறந்தது போன்ற போஸ்டரை அடித்து நகர் முழுவதும் ஒட்டியுள்ளார்.

இதனை உண்மை என நம்பி அவருடைய நண்பர்கள், உறவினர்கள் துக்கம் விசாரிக்க அவரது வீட்டிற்கு வந்தனர். ஆனால் அந்த போஸ்டர் தனது படம் ஒன்றுக்காக அடிக்கப்பட்டதாக நண்பர்களிடம் அவர் விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் அடுத்த சில நாட்களில் உண்மையாகவே நடிகர் ஆர்.எஸ்.கோபால் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். அப்போது அவரது நண்பர்கள் மீண்டும் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ஒட்டினர்

Leave a Reply