தந்தை இறுதிச்சடங்கை முடித்துவிட்டு ஓட்டு போட வந்த வாலிபர்!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தனது தந்தையின் இறுதிச் சடங்குகளை முடித்தவுடனே ஓட்டு போட வாக்குப்பதிவு மையத்திற்கு வந்த வாலிபரை கண்ட மற்ற வாக்காளர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், பீஹார், ஜார்க்கண்ட், காஷ்மீர் என 7 மாநிலங்களில் 51 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி ஒன்றில், வயது முதிர்வு காரணமாக தனது தந்தை உயிரிழந்த நிலையில், அவரது இறுதிச் சடங்குகளை முடித்த கையொடு அங்கு வந்த இளைஞர் ஒருவர் வாக்களித்தார். அவரது ஜனநாயகத்தின் பற்று அங்கிருந்த வாக்காளர்களுக்கு உருக்கத்தை ஏற்படுத்தியது.

Leave a Reply