தண்ணீரில் தத்தளித்து தேர்வு எழுத செல்லும் அண்ணா பல்கலை மாணவர்கள்
சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது
இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் இன்று தேர்வு எழுத பல்கலைக்கழக வளாகத்திற்கு வந்தனர். ஆனால் வளாகம் முழுவதுமே தண்ணீர் தேங்கியிருந்ததால் அவர்கள் தண்ணீரில் தத்தளித்தபடியே தேர்வு அறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தேர்வு எழுத வரும் மாணவர்களின் நலன் கருதி வளாகத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்ற பல்கலை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவர் ஒருவர் பதிவு செய்துள்ள டுவீட்டில் ‘இப்படி எல்லாம் போய் தேர்வு எழுதணும்ன்னு நம்ம ஊருல மட்டும்தான் நடக்கும்’ என்று கூறியுள்ளார்
Ipdi laam Poi Exam eludhuradhu Namma Oorula mattum thaan nadakkum #AnnaUniversity #ChennaiRains #ChennaiRains2017 pic.twitter.com/GVN55fszsM
— Trendswood | Wear A Mask😷 (@Trendswoodcom) November 4, 2017
Leave a Reply
You must be logged in to post a comment.