தண்ணீரிலும், மணலிலும் அதிந்வீன கப்பல்: சென்னையில் இருந்து புறப்படுகிறது

தண்ணீரிலும், மணலிலும் செல்லும் திறன் கொண்ட அதிநவீன ரோந்து கப்பல் சென்னையில் இருந்து புறப்பட்டு தற்போது கடலூர் தேவனாம்பட்டினத்திற்கு வந்து சேர்ந்தது.

கடந்த மார்ச் மாதம் சென்னையில் இருந்து புறப்பட்டு கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மண்டபம் ஆகிய பகுதிகளுக்கு சென்ற இந்த கப்பல் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் இருந்து மீண்டும் சென்னைக்கு புறப்பட்டது. வரும் வழியில் அந்த கப்பல் இன்று கடலூர் வந்தடைந்தது. கடலோர பாதுகாப்பு படை போலீசார் இந்த கப்பலை வரவேற்றதையடுத்து, அதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

Leave a Reply