தஞ்சமடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கைது

ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பிரிட்டிஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ரகசியங்களை தனது விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டவர் அசாஞ்சே என்ற குற்றச்சாட்டு அவர் மீது இருக்கும் நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்படுவாரா? என்ற தகவல் இதுவரை வெளிவரவில்லை

Leave a Reply