தசரா கொண்டாட்டத்தின்போது சுவர் இடிந்து 2 பேர் பரிதாப பலி.
தெலங்கானா மாநிலத்தில், தசரா கொண்டாட்டத்தின்போது கட்டடம் இடிந்துவிழுந்ததில் இரண்டு பேர் பலியாயினர். 20 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நாடு முழுவதும் நவராத்திரி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. சாலைகளில் மக்கள் பெருமளவில் கூடி, மேள தாளங்கள் முழங்க கொண்டாடிவருகின்றனர். அதேபோன்று, தெலங்கானா மாநிலம் நிஸாமாபாத் எனும் இடத்திலும் தசரா விழாவை மக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடினர்.
சாலைகளில் கூடிய மக்கள், ஆடிப்பாடி நவராத்திரி விழாவைக் கொண்டாடினர். இதை, மக்கள் தெருக்களில் கூடியும் தங்கள் வீட்டின் மாடிகளில் கூடிநின்றும் ரசித்தனர். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து, கீழே கொண்டாடிக்கொண்டிருந்த மக்கள்மீது விழுந்தது.
இந்த விபத்தில் இரண்டு பேர் பலியாயினர். 20-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் அருகிலிருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. அந்த விபத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி, தற்போது வெளியாகியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.