தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 17 ஆண்டுகள் சிறை
தங்கை உறவு முறை கொண்ட 17 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் ஒருவருக்கு திண்டுக்கல் மகிளா விரைவு நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே பில்லமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சவுந்திரபாண்டியன் என்ற 20 வயது இளைஞர், அதேபகுதியைச் சேர்ந்த தங்கை உறவுமுறை கொண்ட 17 வயது பெண்ணிடம், திருமண செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சவுந்திரபாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தங்கை உறவுமுறை கொண்ட பெண்ணை ஏமாற்றி அழைத்துச் சென்று பழநியில் உள்ள லாட்ஜில் தங்கி, பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதுகுறித்த வழக்கு திண்டுக்கல் மகிளா விரைவு நீதிமன்றத்தில் கடந்த ஒரு வருடமாக நடந்துவந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சவுந்திரபாண்டியனுக்கு 17ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.