டெல்லி செல்ல வேண்டுமா? வேண்டாமா? என்பதை தேமுதிக தான் முடிவு செய்ய வேண்டும்: ஜெயகுமார்

தேமுதிகவுக்கான கதவுகள் இன்னும் அடைக்கப்படவில்லை என்றும் அதிமுக கூட்டணியில் இணைந்து டெல்லி செல்ல வேண்டுமா? வேண்டாமா? என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும் என்றும், அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

அதிமுக கூட்டணியை நோக்கி நெருங்கி வரும் நிலையில் நேற்று திமுக கூட்டணிக்கும் தேமுதிக முயற்சித்தது துரைமுருகன் பேட்டியில் இருந்து அம்பலமானது. இதனால் அதிமுகவும் தேமுதிகவிற்கான கதவை அடைத்துவிட்டதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், ‘ எங்களுடைய கூட்டணி கதவை நாங்கள் மூடவில்லை. டெல்லி செல்லும் விமானம் தயார். தேமுதிக போர்டிங் பாஸ் வாங்கிவிட்டு வந்தால் டெல்லி செல்லலம். இனி முடிவு செய்யவேண்டியது தேமுதிகதான்’ என்று கூறினார்.

Leave a Reply