shadow

டெல்லி சென்றார் முதல்வர் பழனிச்சாமி! காவிரி குறித்து பேசுவாரா?

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை கொண்டாடுவது தொடர்பாகவும், திட்டங்களை வகுப்பது தொடர்பாகவும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய அளவிலான குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். இதற்காக அவர் இன்று காலை 6 மணிக்கு விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார். கூட்டத்தில் கலந்து கொள்ளும் முன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சினை தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் ஆஜராகி வாதாடும் வக்கீல்கள் குழுவினரை சந்தித்து பேசவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

டெல்லியில் இருக்கும் போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சினை தொடர்பாகவும், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்தும் பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply