டெல்லியில் தொடங்கியது அனைத்து கட்சி கூட்டம்: சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து சுஷ்மா ஸ்வராஜ் விளக்கம்
இன்று அதிகாலை இந்திய விமானப்படை நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலில் தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்க சற்றுமுன் அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் கூடியது
இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது விமானப்படை நடத்திய தாக்குதல் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை செய்தார். மேலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்ததோடு, தாக்குதல் நடத்த வேண்டியதற்கான கட்டாயம் குறித்தும் எதிர்க்கட்சிகளிடம் சுஷ்மா ஸ்வராஜ் விளக்கம் அளித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.