shadow

டெங்கு ஒழிப்பு ஆலோசனை கூட்டத்தில் தூங்கிய அதிகாரிகள்-எம்பி:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் தலைவிரித்தாடி வரும் நிலையில் இந்த டெங்குவை ஒழிக்க தமிழக அரசு மட்டுமின்றி தனியார் சமூகநல அமைப்புகளும் களத்தில் இறங்கி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது

இந்த நிலையில் டெங்குவை ஒழிக்க ஆலோசனை கூட்டம் ஒன்று சமீபத்தில் விழுப்புரத்தில் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சண்முகம் டெங்கு ஒழிப்பு குறித்து பேசினார். ஆனால் பேசியபோது ஒருசில சுகாதார அதிகாரிகள் தூங்கி வழிந்தனர். அதிகாரிகள் மட்டுமின்றி அமைச்சரின் வரிசையில் உட்கார்ந்திருந்த விழுப்புரம் எம்பி ராஜேந்திரனும் தூங்கி வழிந்தார்

இதுகுறித்த வீடியோ ஒன்று தனியார் தொலைக்காட்சியின் சமூக வலைத்தளத்தில் ஒளிபரப்பாகியது. இதை பார்த்த பொதுமக்கள் அரசின் செயல்பாடுகள் எந்த அளவுக்கு இருக்கின்றது என்பதை இது காட்டுவதாக தெரிவித்தனர்.

Leave a Reply