shadow

டெங்கு ஆய்வு கூட்டத்தில் கோலம் போட்டு பொழுதை போக்கிய பெண் அதிகாரி

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் தினந்தோறும் உயிரிழப்பு ஏற்பட்டு வரும் நிலையில் தமிழக அரசு டெங்குவை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பெண் அதிகாரி ஒருவர் பேப்பரில் கோலம் போட்டு கொண்டிருந்த விவகாரம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில், டெங்கு தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டெங்கு ஒழிப்பு குறித்து மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் ஆலோசனைகளை வழங்கினர்.

அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட பெண் அதிகாரி ஒருவர், டெங்கு தடுப்பு குறித்த ஆலோசனைகளை கவனிக்காமல் குறிப்பெடுக்க கொடுக்கப்பட்டிருந்த பேப்பரில் கோலமிட்டு பயிற்சி மேற்கொண்டார். அருகில் இருந்த மற்றோரு பெண் அதிகாரி, டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை குறிப்பெடுத்துக் கொண்டிருந்த நிலையில், அதனை கண்டுகொள்ளாமல் அவர் கோலமிடுவதிலேயே முழு கவனத்தையும் செலுத்தினார்.

அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பெண் அதிகாரி இவ்வாறு அலட்சியமாக நடந்து கொண்டது, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Leave a Reply