shadow

டி.என்.பி.எஸ்.சி நேர்காணலை புதிய முறையில் நடத்த திட்டம்

டிஎன்பிஎஸ்சி நேர்காணல் தேர்வை நடத்த புதிய முறை அறிமுகம் செய்ய தமிழக அரசின் தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இதன்படி நேர்காணல் நடத்தும் குழுவை இனிமேல் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளதாகவும், இந்த முறையில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த புதிய நடவடிக்கை அமலுக்கு வந்தவுடன் முறைகேடுகள் முற்றிலும் தவிர்க்கப்படும் என்றும், முறைகேடுகளைத் தடுப்பதற்காகவே புதிய முறையை அமல்படுத்தப்படுகிறது என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளத்.

இந்த நிலையில் போட்டித் தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை டிஎன்பிஎஸ்சி கைவிட வேண்டும் என்றும், தனியாரிடம் ஒப்படைப்பது பல்வேறு முறைகேடுகளுக்கு வித்திடும் என்றும் திமுக மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply