shadow

டி.என்.பி.எல். கிரிக்கெட்: நாளை முதல் குவாலிஃபையர் போட்டி ஆரம்பம்

கடந்த சில நாட்களாக டி.என்.பி.எல் தொடர் போட்டியின் லீக் ஆட்டங்கள் நடைபெற்ற நிலையில் நாளை முதல் குவாலிஃபையர் போட்டிகள் தொடங்கவுள்ளன. நாளை நடைபெறும் முதல் குவாலிஃபையர் போட்டியில் திண்டுக்கல் மற்றும் மதுரை அணிகள் மோதவுள்ளது

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இந்த போட்டியில் தோற்கும் அணி ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் விளையாடும்.

மேலும் எலிமினேட்டர் ஆட்டம் 8-ந்தேதி திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. இதில் 3-வது இடத்தை பிடித்த கோவை கிங்ஸ்- நான்காவது இடத்தை பிடித்த காரைக்குடி காளை அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குவாலிபையர் 1-ல் தோல்வியடைந்த அணியுடன் விளையாடும். தோற்கும் அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும்.

Leave a Reply