இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. முதல் நாளில் பாகிஸ்தான் அணி 14 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்த போது திடீரென மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது அதன் பின்னர் மழை காரணமாக ஆட்டம் தொடரவில்லை.

இதனை அடுத்து இரண்டாவது நாளில் பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணி 45.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து நேற்று மூன்றாவது நாளில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்ததால் மூன்றாவது நாள் ஆட்டமும் தடைபட்டது. இதனை அடுத்து மூன்று நாட்கள் முடிவடைந்தும் ஒரு இன்னிங்சில் பாதி கூட இன்னும் முடிவடையாததால் இந்த போட்டியில் டிராவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply