டியூஷன் படிக்க வந்த மாணவியிடம் சில்மிஷம் செய்த டீச்சரின் கணவர்: அதிர்ச்சி செய்தி

சிக்கிம் மாநிலத்தில் டியூஷன் படிக்க வந்த 15 வயது மாணவியிடம் சில்மிஷம் செய்த டீச்சரின் கணவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சிக்கிம் மாநிலத்தில் 15 வயது மாணவி பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அவர் கணக்கு பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக அருகிலுள்ள டீச்சேர் ஒருவரிடம் டியூஷன் படிக்க சென்றார்

இந்த நிலையில் சம்பவ தினத்தன்று டியூஷன் சென்ற மாணவியிடம் டியூஷன் டீச்சரின் கணவர் அத்துமீறி நடந்ததாகவும் இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே கூறியதாகவும் கூறப்படுகிறது

இதனை அடுத்து பெற்றோர்கள் டீச்சரிடமும், டீச்சரின் கணவரிடமும் இதுகுறித்து கேட்டபோது இதனை பெரிதுபடுத்த வேண்டாம் இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வதாக டீச்சர் உறுதி அளித்ததை அடுத்தும், அந்த பகுதியில் உள்ளவர்கள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்தும் இந்த பிரச்சனை பெரிதாகாமல் பார்த்துக் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது

இருப்பினும் இது குறித்து அந்த பகுதியில் உள்ளவர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து, டியூசனுக்கு பெண் குழந்தைகளை அனுப்புபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply