ஒரு 18 வயது கூத்து

டிக்டாக்கில் பிரபலமான இளம்பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் இருக்கும் ஒரு இளைஞனுடன் காதல் ஏற்பட்டு, இந்த காதலுக்கு பேஸ்புக்கில் உள்ள நண்பர் ஒருவர் உதவி செய்த காதல் கூத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கேரளாவை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி ஒருவருக்கு பெங்களூரில் இன்ஸ்டாகிராமில் உள்ள 18 வயது கல்லூரி மாணவருடன் காதல் மலர்ந்தது. இந்த காதல் நாளடைவில் அதிகமாகி இருவரும் 18 வயதிலேயே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்

இதனை அடுத்து பெற்றோருக்கு தெரியாமல் கேரளாவில் இருந்து பெங்களூர் செல்ல முயற்சிக்க, அந்த இளம்பெண் முயற்சிக்கு அவரது ஃபேஸ்புக் நண்பர் ஒருவர் உதவி செய்துள்ளார்.

இந்த நிலையில் திடீரென தனது மகளை காணவில்லை என அந்தப் பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளிக்க போலீசார் வாட்ஸ்அப் மூலம் அந்த பெண்ணின் புகைப்படத்தை பதிவு செய்து கொச்சி விமான நிலையத்தில் அவர் இருப்பதை கண்டுபிடித்தனர்

உடனடியாக அவரை விசாரித்தபோது பெங்களூரில் உள்ள இன்ஸ்டா நண்பனை திருமணம் செய்வதற்காக செல்ல உள்ளதாக கூறினார். இதனை அடுத்து பெங்களூரில் உள்ள காதலனை போலீசார் தொடர்பு கொண்டபோது அப்படி ஒரு பெண் யார் என்று எனக்குத் தெரியாது என்று கூறினார்

இதனை ஸ்பீக்கர்களில் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் அதன் பின் மனம் திருந்து தனது பெற்றோருடன் சென்றார் இந்த காதலுக்கு உதவி செய்த பேஸ்புக் நண்பரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் இந்த காதல் கூத்து தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply