டிஎன்பிஎஸ்சி குரூப்-2: முதல் நாளில் 25 மதிப்பெண் இல்லையெனில் 2ஆம் தாள் திருத்தம் இல்லை!

‘டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் சில மாற்றங்கள் செய்து தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி குரூப்-2 முதனிலைத் தேர்வில் தமிழக வரலாறு, மரபு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றும் இந்த மாற்றம் வல்லுநர்களிடம் கலந்து ஆலோசித்த பிறகே முதனிலைத் தேர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் குரூப்-2 பிரதான தேர்வில் ஒரே தாள்களாக இருந்தது இரு தாள்களாக பிரிக்கப்பட்டுள்ளது என்றும், முதல் தாளில் 100க்கு 25 மதிப்பெண் பெற்றால் தான் 2வது தாள் திருத்தப்படும் என்றும், அதேபோல் பணி நியமனத்திற்கு 2வது தாள் மதிப்பெண்களே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

எனவே முதல் தாளில் 25 மதிப்பெண்கள் எடுக்காவிட்டால் 2ஆம் தாள் எழுதியும் பயனில்லை என்பதால் விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply