டிஎன்பிஎல் கிரிக்கெட்: திண்டுக்கல் அணி அபார வெற்றி
கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய போட்டியில் திண்டுக்கல் அணி அபார வெற்றி பெற்றது
இந்த போட்டியில் டாஸ் வென்ற காரைக்குடி அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட்டுக்களை இழந்து 158 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 159 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய திண்டுக்கல் அணி 17 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 161 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை சேர்த்து திண்டுக்கல் அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டியிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.