shadow

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ். முதல்வரின் அறிவிப்புக்கு டாஸ்மாக் ஊழியர்கள் நன்றி

tasmacதமிழகத்தில் 6700 டாஸ்மாக் கடைகள் இருந்த நிலையில் சமீபத்தில் தேர்தலில் கொடுத்த வாக்குறுதி காரணமாக 500 கடைகளை முதல்வர் மூடிவிட்டார். இந்நிலையில் மீதமிருக்கும் 6200 டாஸ்மாக் கடைகளின் ஊழியர்களுக்கு தற்போது தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் 7,204 மேற்பார்வையாளர்கள், 15,677 விற்பனையாளர்கள் மற்றும் 3,753 உதவி மேற்பார்வையாளர்கள் என மொத்தம் 26,634 டாஸ்மாக் ஊழியர்கள் தீபாவளி போனஸை பெறுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தம்ழக அரசின் அறிவிப்பின்படி மேற்பார்வையாளர்களுக்கு ரூ.16,300-ம், விற்பனையாளர்களுக்கு ரூ.12,080-ம், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.9,060-ம் தீபாவளி போனசாக கிடைக்கும். இந்த போனஸ் தொகை கடந்த ஆண்டைவிட கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போனஸ் ஊழியர்களுக்கு 2 தவணையாக வழங்கப்படும் என்றும் முதல் தவணை நேற்று இரவு ஊழியர்களின் வங்கி கணக்கில் போடப்பட்டு விட்டதாகவும், 2-ம் தவணை இன்னும் ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்குள் வழங்கப்பட இருப்பதாகவும் டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் தனசேகரன் கூறியதாவது:-

தமிழக அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் உச்சவரம்பை தளர்த்தி இரட்டிப்பாக வழங்கி இருப்பதற்கு எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியை முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தெரிவிக்கிறோம். மேலும், அவர் உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண குணமடைய எங்கள் சங்கம் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கிறோம். மத்திய அரசு போனஸ் உச்சவரம்பை 2014-2015-ம் ஆண்டிலேயே தளர்த்தி இருந்தார்கள். அதன்படி வைத்து பார்க்கும் போது, கடந்த ஆண்டு முதலே எங்களுக்கு போனஸ் உயர்த்தப்பட்டு வழங்கி இருக்க வேண்டும். எனவே கடந்த ஆண்டு எங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத்தொகையையும் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply