ஞானவேல்ராஜாவை அடுத்து பொன்வண்ணன் திடீர் ராஜினாமா? இரண்டாக பிரிகிறதா திரையுலகம்
சென்னை ஆர்.கே.நகர் தேர்தலில் விஷால் போட்டியிட்டதன் விளைவாக திரையுலகமே இரண்டாக பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையுலகின் சங்கங்களில் இருப்பவர்கள் அரசியல் சாராது இருக்க வேண்டும் என்று அனைவரும் ஏற்றுக்கொண்ட நிலையில் திடீரென விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருடைய ஆலோசனையும் இன்றி களமிறங்கியது அனைவரையும் அதிருப்திக்கு உள்ளாக்கியது
விஷாலின் நடவடிக்கை பிடிக்காமல் தான் கடந்த வாரம் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் பதவியில் இருந்து ஞானவேல்ராஜா விலகியதாக கூறப்படும் நிலையில் தற்போது நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பதவியில் இருந்து நடிகரும் இயக்குனருமான பொன்வண்ணன் திடீரென விலகியுள்ளார்.
விஷாலின் திடீர் அரசியல் பிரவேசம், சங்கத்தின் கொள்கைக்கு எதிரானது என்று கூறி பதவியை பொன்வண்ணன் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. விஷாலின் நடவடிக்கையால் அடுத்தடுத்து ராஜினாமா தொடர்வதால் திரையுலகம் இரண்டாக பிரியும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.