ஜெர்மனியில் கடும் பனிப்புயல்: பொதுமக்கள் சிரமம்
தமிழகம் உள்பட இந்தியாவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான் பனி பொழிந்து வரும் நிலையில் ஜெர்மனியில் பனிப்புயலே வீசியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஜெர்மனியின் தெற்குப் பகுதியில் கடும் பனிப்புயல் வீசிவருவதாகவும், இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், ஜெர்மனி ஊடகனக்கள் திடுக்கிடும் புகைப்படங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பாக ஜெர்மனி நாட்டின் முக்கிய சாலைகளில் சுமார் 2 அடி உயரத்திற்கு பனி உறைந்து காணப்படுவதால் வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.