ஜெயலலிதா விஷயத்தில் பொய் சொன்னது உண்மைதான்: இன்னொரு அமைச்சர் ஒப்புதல்
ஜெயலலிதா உடல்நலமின்றி மருத்துவமனையில் இருந்தபோது அவர் இட்லி சாப்பிட்டார், இடியாப்பம் சாப்பிட்டார் என்று பொய் கூறியதாகவும், அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சமீபத்தில் பேசினார்/
இந்த நிலையில் இன்னொரு அமைச்சரான கே.சி.வீரமணியும் இதனை உறுதி செய்துள்ளார். நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவரை தாங்கள் ஒரு போதும் பார்க்கவில்லை என்றும், ஜெயலலிதா உடல் நலத்துடன் திரும்பி வந்த பின்னர் அவரிடம் தங்களைப் பற்றி வி.கே.சசிகலா புறம் பேசி விடுவாரோ என்கிற பயத்தில்தான் வி.கே.சசிகலா கூறச் சொன்னது போல் ஜெயலலிதா உடல்நிலைப் பற்றி அமைச்சர்கள் பொய்யான தகவலை கூறியதாக தெரிவித்தார்.
வி.கே.சசிகலா குடும்பத்துடன் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்று 2012ம் ஆண்டு அமைச்சர்களிடையே ஜெயலலிதா தெரிவித்ததாகக் கூறிய கே.சி.வீரமணி, ஆட்சியைக் கைப்பற்ற தினகரன் சதித் திட்டம் தீட்டியதாலேயே அவரை கட்சியிலிருந்து ஜெயலலிதா விலக்கி வைத்ததாக கூறினார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட சோளிங்கர் தொகுதி எம்.எல்.ஏ பார்த்திபன் அலுவலகம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டம் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Leave a Reply
You must be logged in to post a comment.