ஜெயலலிதா மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்தவருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி அவர்களின் தலைமையில் ஆணையம் அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ராமநாதன் என்பவர் ஜெயலலிதா இறப்பு குறித்து சிபிஐ விசாரணை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வரும் நிலையில் தேவையில்லாமல் வழக்கு தொடர்வதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதமாக ரூ.50 ஆயிரத்தை மாநில சட்டப்பணிகள் குழு ஆணையத்திற்கு வழங்க உத்தரவிட்டு மனுவை தள்ளுப்படி செய்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.