ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம்: தமிழக அரசு அரசாணை
தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் பெயரை ‘தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம்’ என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு சற்றுமுன் ஆணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்த தமிழக அரசின் ஆணையில் குறிப்பிட்டுள்ளதாவது:
தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு, தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகச் சட்டம், 2013 இயற்றப்பட்டு, அச்சட்டம் 14.11.2013 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கலை பண்பாட்டுத் துறை ஆணையரின் கருத்தை ஏற்று, தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் பெயரை ‘தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகம்’ என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு ஆணையிடுகிறது.
தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகச் சட்டம் 2013-க்கு உரிய திருத்தங்கள் தனியே வெளியிடப்படும்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்த பல்கலைக்கழகத்தின் முதல் வேந்தராக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.