ஜெயநகர் இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி
கர்நாடக சட்டமன்ற தேர்தல் கடந்த மே 12-ந்தேதி நடைபெற்றபோது பெங்களூரு ஜெயநகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் விஜயகுமார் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு அதற்கு பதிலாக கடந்த 11-ந்தேதி அங்கு தேர்தல் நடந்தது.
காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் மகள் செளமியா ரெட்டியும், பாஜக சார்பில் மரணம் அடைந்த விஜயகுமாரின் சகோதரர் பிரகலாத்தும் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி பெங்களூரு எஸ்.எஸ்.எம்.ஆர்.வி. கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 14 சுற்றுகளாக ஓட்டுக்கள் எண்ணப்பட்ட நிலையில் ஆரமத்தில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் செளமியா ரெட்டிய முன்னணியில் இருந்தார்.
9 சுற்றுகள் வரை எண்ணப்பட்டபோது 15,000 வாக்குகள் வரை வித்தியாசம் இருந்தது. ஆனால் அடுத்த 5 சுற்றுகளில் வாக்கு வித்தியாசம் குறையத் தொடங்கியது. பின்னர் ஓட்டு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி 2,889 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.