ஜெகன்மோகன் ரெட்டிக்கு கத்திக்குத்து: விசாகப்பட்டினம் ஏர்போர்ட்டில் பரபரப்பு
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை மர்ம நபர் ஒருவர் இன்று காலை விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கத்திக்குத்து சம்பவத்தால் ஜெகன் மோகன் ரெட்டியின் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் ஜெகன்மோகனை கத்தியால் குத்திய மர்ம நபரை மடக்கிப் பிடித்து பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறியபோது, ‘இது எதிர்க்கட்சி தலைவரை கொல்வதற்கு தெலுங்குதேசம் அரசாங்கத்தால் நடத்தப்பட்ட கொலை முயற்சி. விமான நிலையத்திற்குள் நகம் வெட்டும் கருவியைக் கூட போலீசார் அனுமதிக்காத நிலையில், குற்றவாளியால் எப்படி கத்தியை எப்படி கொண்டு வர முடிந்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.